19 January 2009

கனவோடு காத்திருப்பேன் கண்ணே உனக்காக

கோடி அழகுகள் கொட்டிக் கிடந்தாலும்
ஆயிரம் அற்புதங்கள் அவனியில் இருந்தாலும்
உயிரோடு உலவுகின்ற உவமையிலா ஓவியம் நீ
கனவோடு காத்திருக்கும் கனிவான காதலன் நான்

நதியாகி நான்வரும் திசைபார்த்து வழிமாறி
விலகி ஓடுகிறாய் நீ பெண்ணே விரைவாக
அலைகொண்டு கரைமோதும் கடலாகி ஓரிடத்தில்
கனவோடு காத்திருப்பேன் கண்ணே உனக்காக

2 comments:

S.Lankeswaran said...

என்னப்பு லவ்ஸ்சா?

Arulkaran said...

உங்கள் வருகைக்கு நன்றி இலங்கேஸ்வரன்... ம்ம்ம்... இல்லையென்றால் நம்பவா போறீங்க..???

Post a Comment