கோடி அழகுகள் கொட்டிக் கிடந்தாலும்
ஆயிரம் அற்புதங்கள் அவனியில் இருந்தாலும்
உயிரோடு உலவுகின்ற உவமையிலா ஓவியம் நீ
கனவோடு காத்திருக்கும் கனிவான காதலன் நான்
நதியாகி நான்வரும் திசைபார்த்து வழிமாறி
விலகி ஓடுகிறாய் நீ பெண்ணே விரைவாக
அலைகொண்டு கரைமோதும் கடலாகி ஓரிடத்தில்
கனவோடு காத்திருப்பேன் கண்ணே உனக்காக
19 January 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
என்னப்பு லவ்ஸ்சா?
உங்கள் வருகைக்கு நன்றி இலங்கேஸ்வரன்... ம்ம்ம்... இல்லையென்றால் நம்பவா போறீங்க..???
Post a Comment