பிரபஞ்சத்தை சுத்திப் பார்க்கலாம் வாங்க I
பிரபஞ்சத்தை சுத்திப் பார்க்கலாம் வாங்க II
சூரியன் சார்பான பூமியின் சுற்றுப் பாதையானது ஒரு தளத்திலுள்ள நீள்வட்டப் பாதையாகும். ஏனைய அனைத்துக் கோள்களும் கிட்டத்தட்ட இதேமாதிரியான நீள்வட்டப் பாதையிலேயே உள்ளன. இராசி மண்டலத்திலுள்ள அனைத்து நட்சத்திரக் கூட்டங்களையும் கடந்து செல்வதற்கு பூமிக்கு 12 மாதங்கள் தேவைப்படுகின்றது.
பூமியை மையப்படுத்திய பண்டையகால மாதிரிகள்
சுமார் 6000 வருடங்களுக்கு முன் வானமண்டல ஆராய்ச்சி நிலையங்களை அமைக்கத் தொடங்கி நீண்ட கால வானியல் பதிவுகளை மேற்கொண்டனர். 12 இராசி மண்டலங்களிலுள்ள நட்சத்திரக் கூட்டங்களின், சூரியன் சார்பான அமைவுகளை வைத்து பருவகாலங்களை இலகுவாகக் கண்டறிந்தனர். மாதிரிகளை அமைப்பதை விடுத்து திரும்ப திரும்ப நிகழ்கின்ற உருவமைப்புக்களை (Repeating patterns) வைத்து எதிர்வுகூறல்களை மேற்கொண்டனர்.
சூரியன், சந்திரன், புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி (Sun, Moon, Mercury, Venus, Mars, Jupiter and Saturn) போன்றவற்றின் சுற்றல்களைக் குறித்துக் கொண்டனர். செவ்வாய், வியாழன் மற்றும் சனி போன்றவை, குறித்த கால இடைவெளிகளில் வேகம் குறைந்து பிரகாசமாகி எதிர்திசையில் பயணித்து (கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி) மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி கிழக்கு நோக்கி நகர்வதை அவதானித்தனர்.
பண்டைய வானியலாளர்கள் பூமியே பிரபஞ்சத்தின் மையப்பகுதி எனவும் அது நிலையாக இருக்கிறது எனவும் நம்பினார்கள். எல்லா நட்சத்திரங்களும் விண்ணுலகில் (Celestial sphere) நிலையாக இருந்து கொண்டு நாளுக்கொரு முறை பூமியை சுற்றி வருகின்றன என்றும், சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்கள் சார்பாக மெதுவாக கிழக்கு நோக்கி நகர்வதாகவும் கருதினார்கள்.
கோள்களின் நகர்வு
நேரான நகர்வு: சூரியன் மற்றும் சந்திரன் போலவே வழமையாக கோள்களும் நட்சத்திரங்களின் பின்ணணியில் மெதுவாக கிழக்கு நோக்கி நகர்கின்றன. இந்தக் கிழக்கு நோக்கிய போக்கு நேரான நகர்வு எனப்படுகிறது.
பின்நோக்கிய நகர்வு: ஆனாலும் கோள்கள் காலத்துக்குக் காலம் நிதானித்து பல வாரங்களோ மாதங்களோ மேற்கு நோக்கி நகர்கின்றன. பூமியில் இருந்து பார்க்கும்போது வெளிப்புறமாகவுள்ள கோள்கள் (Superior planets) நட்சத்திரங்கள் சார்பாக வழமையாக கிழக்கு நோக்கி நகர்கின்றன. இருந்தபோதும், குறித்த கால இடைவெளிகளில் வேகம் குறைந்து பிரகாசமாகி எதிர்திசையில் பயணித்து (கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி) மீண்டும் வேகம் குறைந்து பிரகாசம் மங்கி பழைய நிலைக்கு திரும்பி கிழக்கு நோக்கி நகர்கின்றன. இது பின்நோக்கிய நகர்வு (வக்ர கதியில் பயணித்தல்) (Retrograde motion) எனப்படுகிறது.
அரிஸ்டோட்டில் Aristotle (384-322 BC)
பிரபஞ்சம் இரண்டு பகுதிகளாக வகைப்படுத்தப்படுகிறது
1. பூரணத்துவமற்ற, மாற்றமடையக்கூடிய பூவுலகு
2. பூரணத்துவமுள்ள விண்ணுலகு
1. பூரணத்துவமற்ற, மாற்றமடையக்கூடிய பூவுலகு
2. பூரணத்துவமுள்ள விண்ணுலகு
பூமியானது பிரபஞ்சத்தின் மையமெனவும் உருண்டையானது எனவும் அசைவற்று நிலையாக உள்ளதெனவும் முடிவுக்கு வந்தார். கோள்களின் நகர்வு பற்றி பூமியை மையப்படுத்திய மாதிரி ஒன்றை விருத்தி செய்தார்.
அரிஸ்டோட்டிலின் மாதிரியை பின்பற்றி பூமியை மையப்படுத்திய மாதிரி ஒன்றை விருத்தி செய்தார். இது சுமார் 1500 வருடங்களாக அறிவியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. மேலும் 1000 நட்சத்திரங்கள் கொண்ட பட்டியலொன்றை அவற்றின் வானியல் ஆள்கூறுகள் மற்றும் பிரகாசம் பற்றிய தரவுகளுடன் உருவாக்கியிருந்தார்.
கோள்களின் சுற்றுப் பாதையின் மையமானது ஒரு வட்டப்பாதை வழியே நகர்கிறது (deferent).
அந்த மையப்புள்ளியைச் சுற்றி கோள்கள் ஒரு வட்டப் பாதையில் நகர்கின்றன (epicycle). இந்த வட்டப் பாதையின் மையமானது ஒரு புள்ளியிலிருந்து (equant) அவதானிக்கும்போது மாறா வேகத்துடன் பயணிக்கிறது.
இவை இரண்டுமே (epicycle and deferent) ஒரே மாதிரி இடஞ்சுழிப் போக்காகவே சுற்றுகின்றன.
தொலமியின் மாதிரியில் பின்நோக்கிய நகர்வு (Retrograde motion): செவ்வாய், வியாழன் மற்றும் சனி
கோளானது தனது சுற்றுப் பாதையில் (epicycle) பூமிக்கு அண்மையாக வரும்போது அச்சுற்றுப் பாதையின் வழியேயான கோளின் இயக்கமானது சுற்றுப் பாதையின் மையத்தின் பூமி சார்பான சுற்றுப் பாதையிலான நகர்வு திசைக்கு எதிரானது. எனவே கோளானது பின்நோக்கி நகர்வதாகவே தோன்றும். (பார்க்க படங்கள் a,b & c)
தொலமியின் மாதிரியில் பிரத்தியட்சமான நகர்வு (Apparent motion): புதன் மற்றும் வெள்ளி
இந்தக் கோள்களின் சுற்றுப் பாதையின் (epicycle) மையமானது எப்பொழுதுமே பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான நேர்கோட்டிலேயே கிடக்கிறது. இதுனாலேயே கிழக்கில் சூரியனுக்கு பின்பாகவும் மேற்கில் சூரியனுக்கு முன்பாகவும் அவை புலனாகின்றன.
4 comments:
you have done an extensive work...
let all learn this...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவா... நிச்சயமாக...
எளிமையாகவும்,விபரங்களுடன் கூடிய படங்களுடன் அருமையாக சொல்லியுள்ளீர்கள்.
செவ்வாயின் பின்னோக்கி நகர்வு படங்கள் நன்றாக இருந்தது.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வடுவூர் குமார்...
Post a Comment