09 January 2009

கடந்து போன காதல் ஒன்று

பக்கத்து வீடுதான் பார்க்கவில்லை பலநாள்
திடீரென்று ஒருநாள் திகைத்தேன் உன்அழகில்
இடம்பெயர்ந்து வந்ததனால் இதுவரை தெரியவில்லை
இப்படியோர் அழகு பக்கத்தில் இருந்ததென்று

மெதுவாக தொடங்கிய மெல்லிய உணர்வொன்று
நாளான பொழுதில் பாடாய் படுத்தியது
பனியில் நனைந்த ரோஜாஇதழ் போல்
மனது சிலிர்த்து மகிழ்ச்சி கொண்டது

பார்வைகள் பரிமாறி தெளிவான போதும்
பேச முடியவில்லை பெண்ணே உன்னிடம்
ஆசைகள் எல்லாம் அறுந்துபோக அப்படியே
இடம்மாறி போய்விட்டேன் பார்க்க முடியவில்லை

நாட்கள் நகர்ந்து விரைந்தோடி மறைந்தன
என்ன ஆனாயென்று எனக்குத் தெரியவில்லை
சிலகாலம் கழித்து செய்தியொன்று கேட்டேன்
கடந்து போய்விட்டாய் கணவனுடன் என்று

No comments:

Post a Comment